மோடி படம் வைக்க கோரி பாஜவினர் போராட்டம்

ஆத்தூர், டிச.2: நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்திற்கு, நேற்று பாஜ மாவட்ட செயலாளர் வேல்முருகன், நகர தலைவர் சுதாகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பாஜவினர் திரண்டு வந்தனர். பின்னர் அலுவலகத்திலிருந்த ஊழியர்களிடம், நகராட்சி அலுவலகத்தில் தாங்கள் கொண்டு வந்துள்ள பிரதமர் மோடியின் உருவ படம் வைக்க வேண்டும் என கூறினர். ஊழியர்களிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, நகராட்சி அலுவலகத்தின் முன் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு வந்த நகராட்சி ஆணையாளர் சையத்உசேன் மற்றும் போலீசார், பாஜவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உயர் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று, பிரதமரின் படத்தை வைப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து பாஜவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். நகராட்சி அலுவலகத்தின் முன் பாஜகவினர் முற்றுகையிட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: