எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ

கடையநல்லூர், ஏப். 17: கடையநல்லூர் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் ஜேகே பென்னேர் நிறுவனம் சார்பில் கேம்பஸ் இன்டர்வியூ நடந்தது. இதில் மெக்கானிக்கல் மற்றும் எல்க்ட்ரிக்கல் பிரிவு மாணவர்கள் பங்கேற்றனர். எவரெஸ்ட் பாலிடெக்னிக் மட்டுமின்றி பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடிஐ மாணவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் முகைதீன் அப்துல்காதர் தலைமை வகித்தார். ஜேகே பென்னேர் நிறுவன முதுநிலை மேலாளர் குமார் மற்றும் மனிதவள மேம்பாட்டு அதிகாரி கரண், இன்டர்வியூ நடத்தி மாணவ, மாணவிகளை தேர்வு செய்தார். ஏற்பாடுகளை எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் சாமுவேல், பிரேம்குமார் மற்றும் துறை தலைவர்கள் வெங்கடாசலம் முகம்மது ஈசாக், விரிவுரையாளர்கள் பார்த்திபன், மாரிக்குமார், செண்பகராமன், மேலாளர் மகேஸ்வரன், கணேசன் மற்றும் வாகன மேலாளர் சரவணன் செய்திருந்தனர்.

Related Stories: