மங்களமேடு அருகே வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகை, பணம் திருட்டு

பெரம்பலூர், ஏப் 15: பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே வீட்டின் பின்புற கதவை உடைத்து 7 பவுன் நகை மற்றும் ரூ 37 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட வல்வாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி மனைவி பெரியம்மாள் (60). இவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.37 ஆயிரம் பணம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. மேலும் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பெரியம்மாள் மங்களமேடு காவல் நிலைய போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: