குடிபோதையில் ஆசிட் குடித்தவர் பலி

ராமநாதபுரம், ஏப்.14:  சாயல்குடி அருகே இளஞ்செம்பூரை சேர்ந்தவர் காசி ரகுநாதன்(55). இவர் ராமநாதபுரம் அரண்மனையில் உதவியாளராக பணியாற்றி வந்தார். குடிபோதையில் ஆசிட் குடித்த இவர் உடல்நிலை பாதித்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: