அரியலூர், ஏப்.13: அரியலூர் முடி திருத்துவோர் சங்கத்தினர் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் நேற்று கலெக்டரிடம், மண்டேலா படத்தின் டைரக்டர், தயாரிப்பாளர் கைது செய்ய வேண்டி மனு அளித்தனர். அந்த மனுவில், மருத்துவ சமுதாய மக்களை இழிவுப்படுத்தி மண்டேலா என்ற தமிழ் படம் கடந்த 4ம் தேதி ஒரு தனியார் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த படத்தின் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி ராமச்சந்திரன் மற்றும் இயக்குனர் அஸ்வின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து இந்த படத்தை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும்.