ஜெயங்கொண்டம், ஏப்.13: ஜெயங்கொண்டம் பகுதியில் மீண்டும் உருமாறி வரும் கொரோனா அச்சத்தில் வாரச் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் தற்போது முன்பைவிட வேகமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரியலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் ஜெயங்கொண்டம் வாரச்சந்தைக்கு பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் கீரை, கிழங்கு, காய்கறி போன்றவற்றை விற்பனைக்கு எடுத்து வருகின்றனர்.