விஷம் குடித்து தாய் தற்கொலை விபத்தில் மகன் இறந்ததால்

போளூர்,ஏப்.9: போளூர் அருகே சாலை விபத்தில் மகன் இறந்ததால், விஷம் குடித்து தாய் தற்கொலை செய்து கொண்டார். போளூர் அடுத்த முடையூர் கிராமத்தை சேர்ந்த நாராயணன்(65), கூலி தொழிலாளி. இவரது மனைவி மணி(55). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்த பைக் விபத்தில் மகன் இறந்து விட்டாராம். இதனால், தாயார் மணி மனவேதனையில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது, மணி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த நாராயணன் மற்றும் அக்கம்பக்கத்தினர் மணியை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிசிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நாராயணன் போளூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: