திருவட்டார் அருகே தேர்தல் பறக்கும்படை வாகனம் உடைப்பு

குலசேகரம்,ஏப்.5: தேர்தல் பறக்கும்படையை சேர்ந்த  சைபர் கிரைம் எஸ்ஐ முகமது  சம்சிர்  உள்ளிட்டோர் நேற்று திருவட்டாரை அடுத்துள்ள பூவன்கோடு பகுதியில்  பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கல்லங்குழி பகுதியை சேர்ந்த சுஜின்  (29) என்பவர் பணி செய்யவிடாமல் தடுத்ததோடு அவர்களின் வாகனத்தின் பின்பக்க  கண்ணாடியை கல்வீசி உடைத்தார். இதனையடுத்து சுஜினை தேர்தல் பறக்கும் படையினர்  துரத்தி பிடித்து திருவட்டார் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து  திருவட்டார் போலீசார் வழக்குபதிவு செய்து சுஜினை கைது செய்தனர்.

Related Stories: