குளித்தலை நகரில் திமுக வேட்பாளர் மாணிக்கம் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு

குளித்தலை, ஏப்.5: குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் நேற்று குளித்தலை நகரத்தில் சுங்க கேட்,கடம்பர் கோயில், நீதிமன்றம், பயணியர் விடுதி, காந்தி சிலை, பேராளம்மன் கோயில் தெரு , எம் பி எஸ் அக்ரஹாரம், மாரியம்மன் கோயில் தெரு வைசியாள் தெரு பெரிய பாலம் பெரியார் நகர் மலையப்ப நகர் வையாபுரி நகர் தெப்பக்குள தெரு, பாரதி நகர், காவேரி நகர், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது நகர் முழுவதும் பொதுமக்கள் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது திமுக வேட்பாளர் மாணிக்கத்தை ஆதரித்து தொகுதி பொறுப்பாளர் நாமக்கல் பார் இளங்கோவன் பேசுகையில்,திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மலர உங்கள் வேட்பாளர் மாணிக்கத்திற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார். வேட்பாளருடன் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவி ராஜா, நகர அவைத் தலைவர் சாகுல் அமீது, நகரத் துணைச் செயலாளர் செந்தில்குமார், மண்டல பொறுப்பாளர்கள்மெடிக்கல் மாணிக்கம், ஜபருல்லா, விபி சேகர். அருண்மொழி, பாலசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்

Related Stories: