தூத்துக்குடி,ஏப்.3: தூத்துக்குடியில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் தபால் வாக்கு செலுத்தினர். இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், ஊர்க்காவல் படையினர், முன்னாள் படைவீரர்கள், முன்னாள் காவலர்கள் ஆகியோருக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடந்தது. தபால் வாக்குப்பதிவு நடைபெறுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அன்று காவல்துறையினர் 2130 நபர்கள், தீயணைப்புத் துறையினர் 31 நபர்கள், ஊர்க்காவல் படையினர் 298 நபர்கள், முன்னாள் படைவீரர்கள் 208 நபர்கள், முன்னாள் காவல்துறையினர் 82 நபர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 148 நபர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.