கோவை, ஏப்.3: கோவை தெற்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். அவர், தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில், மயூரா ஜெயக்குமார் நெசவாளர் காலனி, என்.டி.சி குவாட்டர்ஸ், ராமர் காலனி, பி.என்.டி காலனி, தடாகம் சாலை, பாரதி பூங்கா, மேட்டுப்பாளையம் ரோடு, கோட்டை மேடு, வெரைட்டி ஹால் ரோடு ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கிறிஸ்தவ மக்களையும், இஸ்லாமியர்களையும் சந்தித்து கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தவிர, வீதி வீதியாக நடந்து சென்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,`இப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்து போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும். திமுக ஆட்சி வந்தவுடன் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சுரங்க பாதை வசதி ஏற்படுத்தப்படும்.