பெரம்பலூர்,ஏப்.3: பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி அனுசரிக் கப்பட்டது. இன்று (3ம்தேதி) இரவு உயிர்ப்புப் பெருவிழாவான ஈஸ்டார் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தையும், உயிர்ப்பையும் நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படும் தவக்காலம், கடந்த பிப்ரவரி 17ம்தேதி தொடங்கியது. 40 நாட்கள் அனுசரிக்கப்படும் தவக்காலத்தில், புனித வாரத்தின் மிகமுக்கிய நாளான நேற்று (2ம்தேதி) இயேசு கிறிஸ்து கல்வாரி மலையில் சிலுவையில் உயிர்நீத்ததை நினைவு கூறும் புனிதவெள்ளி அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி இயேசு உயிர்நீத்த மாலை 3 மணிக்கு அவரது பாடுபட்ட சொரூபம் துணியால் மூடிவைக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தேவாலய வளாகங்களில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி, சிறப்பு பிரார்த்தனையுடன் நடத்தப்பட்டது.