கரூர், ஏப். 2: மாவட்ட திமுக பொறுப்பாளரும், கரூர் தொகுதி திமுக வேட்பாளருமான செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:கரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் நான் நிச்சயம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.இதேபோல், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் பின்னால் 2 வாகனங்கள் மட்டுமே செல்கிறது. ஆனால், பாஜக வேட்பாளர் பின்னால் 30 வாகனங்கள் செல்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. பாஜக வேட்பாளருக்காக பிற மாநிலம் மற்றும் மாவட்டப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.