ஈரோடு, ஏப். 1: பெருந்துறை தொகுதியை வளர்ச்சி திட்டங்களில் மாநிலத்திலேயே முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்று பெருந்துறை சுயேட்சை வேட்பாளர் தோப்பு வெங்டாச்சலம் உறுதியளித்துள்ளார். பெருந்துறை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தென்னந்தோப்பு சின்னத்திற்கு வாக்கு கேட்டு நேற்று ஊத்துக்குளி ஒன்றிய பகுதிகளான செங்கபள்ளி, கஸ்தூரிபாளையம் , ஊத்துக்குளி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், எஸ். பெரியபாளையம், ஏ.பெரியபாளையம் , ரெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகிளல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது: கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமைச்சர்களின் தொகுதிகளில்கூட வாக்குகள் குறைவாக பெற்றார்கள். ஆனால் நான் அதிகப்படியான வாக்குகளை அதிமுகவிற்கு பெற்று கொடுத்தேன். முதல்வர் கூட என்னை அழைத்து பாராட்டினார்.