திருவாரூர், மார்ச் 31: திருவாரூர் திமுக வேட்பாளர் பூண்டிகலைவாணன் நேற்று திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட தண்டலை, புலிவலம், வேலங்குடி உட்பட பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, திமுக ஆட்சி அமைந்தவுடன் தொகுதியின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். தேர்தல் அறிக்கையில் கூறியபடி வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் போடப்படும். 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். மாணவர், மகளிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்.