கொள்ளிடம், மார்ச் 29: கொள்ளிடம் பகுதியில் உளுந்து மற்றும் பச்சை பயறு சாகுபடி மிகவும் குறைந்து விட்டதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதி கடைமடை பகுதியாகும். இந்த வருடம் தொடர்ந்து மழை பெய்ததால் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த சம்பா நெற்பயிர் பெரும்பகுதி சேதமடைந்து விட்டது. இதனால் விவசாயிகள் துயரத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் தொடர்ந்து பெய்த மழை உளுந்து மற்றும் பயறு விதைப்பு செய்யும் நேரத்திலும் பெய்து கொண்டிருந்ததால் உளுந்து விதைப்பு செய்ய முடியாமல் போனது. கொள்ளிடம் பகுதியில் வருடந்தோறும் 10,500 எக்டேர் மற்றும் அதற்கு மேலும் நிலத்தில் சம்பா நெற்பயிர் வருடந்தோறும் பயிரிடப்பட்டு வருவது வழக்கம். அறுவடை முடியும் தருவாயில் அறுவடைக்கு முன்பாகவே வயலில் உளுந்து விதைப்பதும், தரிசாக உள்ள நிலங்களிலும் ஒரே நேரத்தில் உளுந்து மற்றும் பயறு விதைப்பு செய்வது வழக்கமாக இருந்து வந்தது.