கோவை, மார்ச் 26: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கடந்த ஒருவார காலமாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று மாதம்பட்டி, நரசீபுரம், ஈஷா அருகேயுள்ள தானிகண்டி, ஏழுவாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்தவேனில் சென்றபடி இரட்ைட இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அவருக்கு, பல்வேறு கிராமங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். தானிகண்டி பகுதியில் ஆதிவாசிகள் பாரம்பரிய நடனம் ஆடி, வரவேற்பு அளித்தனர். பின்னர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:தொண்டாமுத்தூர் தொகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுத்துள்ளேன். இத்தொகுதியில் வசிக்கும் விவசாயிகளின் கஷ்டம் என்ன? என உணர்ந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்துள்ளேன். தேர்தல் நேரத்தில் மட்டும் தொகுதிக்குள் வருபவன் நான் அல்ல. என்னை எப்போது வேண்டுமானாலும், யாரும், எங்கேயும் சந்திக்கலாம். நான், பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த தொகுதிக்கு வந்து, எண்ணற்ற திட்டங்களை துவக்கி வைத்துள்ேளன். அதை இங்குள்ள மக்கள் நன்கு அறிவார்கள்.