புதுக்கோட்டை,மார்ச் 26: மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் 2 நாட்கள் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தனசேகரன் வாழ்வின் திறன்களான சுய விழிப்புணர்வு, பிறர்நிலையில் தன்னை வைத்துப் பார்த்தல், தகவல் தொடர்பு திறன், முடிவெடுத்தல் திறன், மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் திறன் போன்ற திறன்கள் மூலம் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் நோக்கில் செயலாய்வினை மேற்கொண்டார்.