கோவை, மார்ச் 25: கோவை மாவட்டத்தில் 861 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமிரா பொருத்தும் பணிகள் விரைவில் துவங்க உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 1,085 மையங்களில் 4,427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. இதில் மேட்டுப்பாளையம் தொகுதியில் 51 வாக்குச்சாவடிகளும், சூலூர் தொகுதியில் 52 வாக்குச்சாவடிகளும், கவுண்டம்பாளையம் தொகுதியில் 153 வாக்குச்சாவடிகளும், கோவை வடக்கில் 153 வாக்குச்சாவடிகளும், தொண்டாமுத்தூர் தொகுதியில் 137 வாக்குச்சாவடிகளும், கோவை தெற்கில் 125 வாக்குச்சாவடிகளும், சிங்காநல்லூர் தொகுதியில் 91 வாக்குச்சாவடிகள், கிணத்துக்கடவு தொகுதியில் 59 வாக்குச்சாவடிகளும், பொள்ளாச்சி தொகுதியில் 28 வாக்குச்சாவடிகளும், வால்பாறை தொகுதியில் 12 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 861 வாக்குச்சாவடிகள் பதற்றமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.