திருச்சி, மார்ச் 23: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருச்சி தலைமை தபால் அருகே உள்ள ஐஓபி வங்கியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான சிவராசு, வாகனங்களில் தேர்தல் விழிப்புணர்வு வில்லைகளை ஒட்டினார். பின்னர் கலெக்டர் சிவராசு கூறியதாவது: தமிழகத்திலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. திருச்சியை பொருத்தவரை கடந்த வாரம் நாள்தோறும் 12, 13 என இருந்த தொற்று எண்ணிக்கை தற்போது நாள்தோறும் 20ஆக உயர்ந்துள்ளது.