பொன்னமராவதி,மார்ச்23: திமுக ஆட்சி அமைந்தவுடன் 100நாள் வேலை 150நாளாக ஆக்கப்படும் என திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் ரகுபதி கூறினார். பொன்னமராவதி வடக்கு ஒன்றியப்பகுதியில் திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் ரகுபதி வாக்கு கேட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் பொன்னமராவதி வடக்கு ஒன்றியப்பகுதியில் சித்தூரில் தொடங்கி கூடலூர், நல்லூர், நெறிஞ்சிக்குடி, சேரனூர், ஆலம்பட்டி, கொன்னையம்பட்டி, இடையாத்தூர், தேனூர் உள்ளிட்ட 35இடங்களில் வாக்குகள் கேட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்..அப்போது ரகுபதி பேசியதாவது: தற்போது 100நாள் வேலை முழுமையாக வழங்கப்படவில்லை. திமுக ஆட்சி அமைந்தவுடன் 100நாள் வேலை முழுமையாக வழங்கப்பட்டு 150நாளாக உயர்த்தப்படும். மாணவர்களின் படிப்பு சுமையினை ஏற்கும் வகையில் அனைத்து கல்விக்கடனும் தள்ளுபடி செய்யப்படும், மகளிர்குழுக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அவர்களுக்கு முறையாக சுழல்நிதி மானியம் வழங்கப்படும்.