சாலையோர மின்கம்பங்களை சேதப்படுத்தும் மர்ம நபர்கள்

 

பரமக்குடி, ஏப்.29: பரமக்குடி அருகே கீழப்பெருங்கரை கிராமத்தில் 500 குடியிருப்புகள் உள்ளன. மதுரை – ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஊருக்குள் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்து வரவேண்டும். ஊருக்கும் செல்லும் வழியில் உள்ள மின்கம்பங்களை அடிக்கடி மர்ம நபர்கள் சேதப்படுத்தி வருகின்றனர்.

கடந்த ஆறு மாதத்தில் மட்டும் சுமார் ஐந்து மின்கம்பங்களை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் மின் விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் ஊருக்குள் வருவதற்கு பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர்.எனவே கீழப்பெருங்கரை கிராமத்தில் மின்கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலையோர மின்கம்பங்களை சேதப்படுத்தும் மர்ம நபர்கள் appeared first on Dinakaran.

Related Stories: