அரியலூர், மார்ச் 21: செந்துறை அருகிலுள்ள நத்தகுழி திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள நத்தகுழி கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா கடந்த மார்ச் 2ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது, தொடர்ந்து மக்கள் நலமுடன் வாழ மகாபாரதம் பாடப்பட்டது. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்து அலங்கரிக்கப்பட்ட திரௌபதி அம்மன், தனது பரிவாரங்களுடன் சிறு தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.