சேந்தமங்கலம் தொகுதியில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

சேந்தமங்கலம், மார்ச் 21:  சேந்தமங்கலம் தொகுதியில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா, தொகுதி பொறுப்பாளர் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமையில் நடந்தது. அலுவலகத்தை திறந்து வைத்த கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார், திமுக வேட்பாளர் பொன்னுசாமியை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது: திமுக தலைவர் ஸ்டாலினை முதலமைச்சராக, நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். சேந்தமங்கலம் தொகுதி வேட்பாளர் மிகவும் எளிமையானவர். அதிமுகவினரின் ஊழல் குறித்து பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லி, அதை வாக்காக மாற்ற வேண்டும். அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் கூட ஊழல் நடந்துள்ளதை, துண்டு பிரசுரமாக அச்சிட்டு வீடு, வீடாக வழங்க வேண்டும்.

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில், சேந்தமங்கலம் தொகுதி வேட்பாளர் பொன்னுசாமி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, கொமதேக மாவட்ட செயலாளர் பழனிவேல், திமுக ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்ரமணியம், செந்தில்முருகன், பேரூர் செயலாளர்கள் நடேசன், தனபாலன், இளைஞரணி அமைப்பாளர் கதிர்வேல், தகவல் தொழில்நுட்ப அணி விஸ்வநாத், விசிக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: