சேந்தமங்கலம், மார்ச் 21: சேந்தமங்கலம் தொகுதியில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா, தொகுதி பொறுப்பாளர் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமையில் நடந்தது. அலுவலகத்தை திறந்து வைத்த கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார், திமுக வேட்பாளர் பொன்னுசாமியை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது: திமுக தலைவர் ஸ்டாலினை முதலமைச்சராக, நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். சேந்தமங்கலம் தொகுதி வேட்பாளர் மிகவும் எளிமையானவர். அதிமுகவினரின் ஊழல் குறித்து பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லி, அதை வாக்காக மாற்ற வேண்டும். அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் கூட ஊழல் நடந்துள்ளதை, துண்டு பிரசுரமாக அச்சிட்டு வீடு, வீடாக வழங்க வேண்டும்.