நாமக்கல், மார்ச் 21: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார், மாவட்டம் முழுவதும் கொடி அணிவகுப்பு நடத்தி வருகிறார்கள். அதன்படி நாமக்கல்லில் 3 வதுமுறையாக நேற்று போலீசார், துணை ராணுவ வீரர்கள் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. பூங்கா சாலையில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலத்தை நாமக்கல் டிஎஸ்பி காந்தி தொடங்கி வைத்தார். இதில் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் துணை ராணுவபடையினர், போலீசார் ஊர்வலமாக சென்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாகசென்ற இந்த ஊர்வலம் மீண்டும் பூங்கா சாலையை சென்றடைந்தது.