பள்ளிபாளையம்,மார்ச் 20: பள்ளிபாளையத்தில் தேமுதிகவில் இருந்து விலகிய நிர்வாகிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர், நேற்று அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். பள்ளிபாளையம் நகர தேமுதிக செயலாளர் ஆறுமுகம், அக்கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ், முன்னாள் மாவட்ட பொருளாளர் பூபதி, நகர பொருளாளர் முருகேஷ், நகர துணைச்செயலாளர் தாமோதரன், மாவட்ட பிரதிநிதி கண்ணன், வார்டு செயலாளர்கள் தியாகராஜன், சேகர், பழனிசாமி, ராஜா, முருகன், கதிர்வேல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர், நேற்று அக்கட்சியில் இருந்து விலகினர். இவர்கள் ஆலாம்பாளைத்தில் உள்ள மின்துறை அமைச்சர் தங்கமணியின் வீட்டுக்கு வந்து, அமைச்சருக்கு சால்வை அணிவித்து, தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.