ராமநாதபுரம், மார்ச் 20: தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்.6ல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மார்ச் 12ல் தொடங்கிய வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடைசி நாளான நேற்று வரை 132 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். பரமக்குடி (தனி) தொகுதியில் திமுக வேட்பாளர் செ.முருகேசன், அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் உள்பட 24 பேர் மனுத்தாக்கல்
செய்துள்ளனர். திருவாடானை தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் கரு.மாணிக்கம், அதிமுக வேட்பாளர் கே.சி.ஆனிமுத்து உள்பட 32 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.