பைக்குகள் மோதல்: வாலிபர் பலி

இலுப்பூர், மார்ச் 19: இலுப்பூர் அருகே உள்ள வீரப்பட்டி பகுதியை சேர்ந்த குமரேசன் மகன் தீனா (19). இவர் நேற்று மாலை தனது பைக்கில் அதே பகுதியை சேர்ந்த நண்பர் சதீஷ் என்பவருடன் இலுப்பூக்கு சென்றார். இலுப்பூர்- புதுக்கோட்டை சாலை நவம்பட்டி அருகே சென்றபோது விளாப்பட்டி பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் தியாகு ஓட்டி வந்த பைக்கும், தீனா ஓட்டி வந்த பைக்கும் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தீனா பலியானார். படுகாயமடைந்த சதீஷ் மற்றும் தியாகு ஆகியோர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகி்ச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: