ஜெயங்கொண்டம், மார்ச் 19: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காணாமல் போன டிரைவர் உடல் சடலமாக மீட்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஆமணக்கந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்மேகம் (30). லாரி டிரைவர். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி கௌசல்யா என்ற மனைவியும், அகரன், ஹாசினி என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் லாரி ஓட்டும் வேலைக்கு சென்றால் 10 அல்லது 15 நாட்கள் கழித்து வீட்டிற்கு வருவது வழக்கம். அதேபோன்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு லாரி தொழிலுக்கு சென்றவர் 6 நாட்களுக்கு முன்பு தனது மனைவி கௌசல்யாவிற்கு வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். அப்பொழுது தனக்கு கடன் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், விஷமருந்தி தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் பேசியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த மனைவி தனது உறவினர்களிடம் கூறி கணவரை தேடி வந்தார். அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச் ஆப் செய்துள்ளதால் மேலும் அவரை தொடர்புகொள்ள முடியாமல் தவித்து வந்தனர்.