ஒரே நாளில் 9 பேர் மனுத்தாக்கல்

சிவகங்கை, மார்ச் 17:  சிவகங்கை மாவட்டத்தில் நேற்று காரைக்குடி தொகுதியில் சுயேட்சை ஒருவர், திருப்பத்தூர் தொகுதியில் 7 சுயேட்சை வேட்பாளர்கள், சிவகங்கை தொகுதியில் அனைத்து மக்கள் புரட்சி கட்சி சார்பில் ஒருவர் என மொத்தம் ஒன்பது பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இதுவரை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 19 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். மேலும் சுயேட்சை வேட்பாளர்கள் சார்பில் அனைத்து தொகுதி அலுவலகங்களில் இருந்தும் வேட்பு மனு பூர்த்தி செய்வதற்கான மனுக்களை வாங்கி சென்றனர்.

Related Stories: