அரியலூர், மார்ச் 16: அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பு மனுவை அரசியல் கட்சியினர் தாக்கல் செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் தனது வேட்பு மனுவை ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஏழுமலையிடம் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சுகுணாகுமார் தனது வேட்பு மனுவை ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினார்.