தா.பழூர் மார்ச் 15: அரியலூர் மாவட்டம் தா.பழூரில் நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய அரசு நேருயுவ கேந்திரா பெரம்பலூர் மாவட்டம் சார்பில் சுதந்திர இந்தியாவின் 75 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி தா.பழுரில் நடைபெற்றது.சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மூலம் சுதந்திரத்தின் சிறப்பை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். நாட்டின் இன்றைய நிலைக்கு பல்வேறு பெரும் தலைவர்களின் போராட்டமும், தியாகமும் முக்கிய காரணம். தலைவர்களின் தியாகங்களை புரிந்து கொண்டு நாட்டின் பண்பாட்டு பெருமைகளை போற்றி பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சமூக ஆர்வலர் செந்தில் குத்துவிளக்கு ஏற்று துவக்கி வைத்தார்.