தோகைமலை, மார்ச் 14: தோகைமலை பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கரூர் மாவட்டம் தமிழகத்தில் 2021ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் கடந்த 26ம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி மாவட்ட தேர்தல் நடத்தும் தலைமை அலுவலர் மலர்விழி உத்தரவின்பேரில் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணராயபுரம், குளித்தலை மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் 24 மணிநேரம் வாகனத்தணிக்கை செய்வதற்கு 3 குழுக்கள் கொண்ட பறக்கும் படை அதிகாரிகளை நியமிக்கப்பட்டு உள்ளனர்.அதன்பேரில் 24 மணிநேரமும் கிருஷ்ணராயபுரம், குளித்தலை மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் உள்பட பல்வேறு பகுதிகளில் வாகனத்தணிக்கை செய்யும் பணிகளை தீவிரப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.