ஈரோடு, மார்ச் 10: கோபி அடுத்துள்ள நம்பியூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு விழா மற்றும் “திராவிடம் வெல்லும்” எனும் தலைப்பில் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழக செயலாளர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். நம்பியூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் மெடிக்கல் செந்தில்குமார், நம்பியூர் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் சண்முகசுந்தரம், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, நம்பியூர் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் அரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.