அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

ராசிபுரம், மார்ச் 9: ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம், தாசில்தார் ராஜேஷ்கண்ணா தலைமையில் நடந்தது. இதில் ராசிபுரம் தொகுதியில் சட்டமன்ற தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், வாக்குப்பதிவு, மூத்த குடிமக்களுக்கான தபால் வாக்கு குறித்தும், நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசியல் கட்சிகளின் சின்னங்களை அகற்றுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேலு பேசுகையில், ‘அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ள புகார்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். தேர்தல் விதிமுறை மீறல்கள் இருப்பின், அவை உடனடியாக சரிசெய்யப்படும். உரிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு, பாரபட்சமின்றி நடைபெறவும், அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,’ என்றார்.

Related Stories: