ஆர்ப்பாட்டம்; 200 பேர் மீது வழக்கு

மேட்டூர், மார்ச் 8: மேட்டூர் சதுரங்காடியில், நேற்று முன்தினம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மேட்டூர் தொகுதி தலைவர் பைரோஸ், மாநில தலைவர் நெல்லை  முபாரக், மாநில துணைத் தலைவர் காலித் முகமத், சேலம் மாவட்ட தலைவர் அப்சர்  அலி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மேட்டூர் போலீசார், அனுமதியில்லாமல் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் செய்ததாக, 200 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Related Stories: