தரங்கம்பாடி, மார்ச் 7: தில்லையாடி நேரடி கொள்முதல் நிலையத்தில் சாக்குகள் பற்றாக்குறையால் 16,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. தரங்கம்பாடி அடுத்த தில்லையாடியில் நேரடி கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் சாக்குகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கொண்டு வந்த 16 ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. இதுகுறித்து விவசாயி கலியப்பெருமாள் கூறியதாவது: தில்லையாடியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தில்லையாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர். கடந்த சில நாட்களாக கொள்முதல் செய்யப்படாமல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. கொள்முதல் செய்யப்படாததற்கு சாக்கு பற்றாக்குறையே காரணம் என்று கூறப்படுகிறது.