பொள்ளாச்சி, மார்ச். 7: பொள்ளாச்சி தாலுகா அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பறக்கும் படையினருக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. சப்-கலெக்டர் வைத்திநாதன் தலைமை தாங்கினார். டி.எஸ்பி. சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின்போது அதிகாரிகள் கூறுகையில், ‘சட்டமன்ற தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்ததால், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வினியோகிப்பதை தடுக்கவும், குறிப்பிட்ட தொகைக்கு அதிகமான பணம் கொண்டு செல்வதை கண்டறிந்து பறிமுதல் நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி, கடத்தல் சம்பவத்தையும் உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.