ஒட்டன்சத்திரம், மார்ச் 7: கடந்த டிசம்பர் 2020ல் நடந்த தேசிய திறனாய்வு தேர்வு (என்டிஎஸ்இ), ஜனவரி 2021ல் நடந்த ஊரக திறனாய்வு தேர்வு (டிஆர்யூஎஸ்டி), பிப்ரவரி 2021ல் நடந்த தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித் தொகை தேர்வு (என்எம்எம்எஸ்) ஆகிய தேர்வுகளின் முடிவுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வுகள் முடிந்து 1, 2 மாதங்களாகியும், தேர்வு முடிவுகள் வெளியாகாததால் மாணவர்கள் கவலையடைந்துள்ளனர். எனவே மார்ச் 10ம் தேதிக்குள் என்டிஎஸ்இ தேர்வு முடிவுகளையும், மார்ச் 20ம் தேதிக்குள் டிஆர்யூஎஸ்டி தேர்வு முடிவுகளையும் மார்ச் 30ம் தேதிக்குள் என்எம்எம்எஸ் தேர்வு முடிவுகளையும் வெளியிட்டு கல்வி உதவித் தொகை கிடைக்க உதவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.