நத்தம், மார்ச் 7: நத்தம் அருகே நல்லகண்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(25). கூலித் தொழிலாளியான இவர் நல்லகண்டத்திலிருந்து சமுத்திராபட்டி நோக்கி டூவீலரில் சென்றுள்ளார். அப்போது சடையம்பட்டி அருகே சென்ற போது எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிவக்குமார் உயிரிழந்தார். நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன சிவக்குமாருக்கு மனைவியும், 7 மாதத்தில் ஆண்குழந்தையும் உள்ளது.