தூத்துக்குடி, மார்ச் 7: தூத்துக்குடியில் திமுக சார்பில் தெருமுனை பிரசாரக்கூட்டம் நடந்தது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரசாரக்கூட்டம் தூத்துக்குடி மட்டக்கடையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாநகர பொருளாளர் அனந்தையா தலைமை வகித்தார். திரேஸ்புரம் பகுதி செயலாளர் நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
இதில், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், மாவட்ட அணி செயலாளர்கள் அந்தோணி ஸ்டாலின், மோகன்தாஸ்சாமுவேல், ரமேஷ், அன்பழகன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலகுருசாமி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார், மாநகர இளைஞரணி செயலாளர் ஆனந்த்கேபிரியல்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், அன்டோ பொன்சேகா, மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், மருத்துவ அணி செயலாளர் அருண்குமார், அண்ணா நகர் பகுதி துணை செயலாளர் பாலு, வர்த்தக அணி துணைசெயலாளர் கிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.