கோவை, மார்ச்.4: கோவை சரவணம்பட்டி சின்ன மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பிரதாப் (23). டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வாலிபர் பிரதாப்பை வழிமறித்தார். பணம் கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை கழுத்தில் வைத்து சட்டைப்பாக்கெட்டில் இருந்த ரூ.500 ஐ பறித்து கொண்டு தப்பினார். இது குறித்து பிரதாப் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், பணம் பறித்தது சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (21) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.