குன்னூர், மார்ச் 4: சட்டமன்ற தேர்தலையொட்டி குன்னூரில் துணை ராணுவ படையினருடன் இணைந்து போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் பாதுகாப்பு பணிகள் மற்றும் வாக்குச்சாவடி அமைக்கும் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவ படையினர் 90 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.