ஈரோடு, மார்ச் 4: ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும், நிலைக்கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்களிடம் தேர்தல் தொடர்பான புகார் அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் கதிரவன் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் கதிரவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் நிலைக்கண்காணிப்பு குழுக்கள் (எஸ்.எஸ்.டி) மற்றும் பறக்கும் படை குழுக்கள் (எப்.எஸ்.டி) அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் நேரடியாக அந்த தொகுதி பறக்கும் படை, நிலைக்கண்காணிப்பு குழுக்களிடம் அளிக்கலாம்.