நாமக்கல், மார்ச் 3: நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், அவைத்தலைவர் உடையவர் தலைமையில் நேற்று நடைபெற்றது.மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் பேசுகையில், நாமக்கல் பொம்மைகுட்டைமேடு லட்சுமி திருமண மண்டபம் அருகில், வரும் 8ம் தேதி காலை11 மணிக்கு, உங்கள் தொகுதியில் மு.க ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மக்களின் கோரிக்கைகளை கேட்டு அதனை தீர்க்கும் வகையில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் இருந்து திமுக, பொதுமக்கள் என பல ஆயிரம் பேர் கலந்து கொள்ள வேண்டும். ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் தலைமை கழகத்தில் இருந்து வடிவமைக்கப்பட்ட ஸ்டாலின் தான் வராரு,விடியல் தரப்போறாரு என்ற பாடலை ஒளிபரப்பி ஆட்டோ மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். இந் நிகழ்ச்சியை மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், வாக்குசாவடி ஏஜென்டுகள், சார்வு அணி அமைப்பாளர்கள் வெற்றிகரமாக நடத்தவேண்டும் என்றார்.