சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

சீர்காழி, மார்ச் 3: சீர்காழி அருகே சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சீர்காழி அருகே சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நவக்கிரகங்களில் ஒன்றான புதன், தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். புகழ்பெற்ற இந்த கோயிலில் இந்திர விழா கடந்த 23ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவையொட்டி சுவேதாரண்யேஸ்வரர், பிரம்ம வித்யாம்பிகை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: