விருதுநகர், மார்ச் 2: இலவச வீட்டுமனை கேட்டு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மனு செய்ய வந்த வெம்பக்கோட்டை நேருஜி நகர் பொதுமக்கள், அங்கிருந்த பெட்டியில் தங்கள் கோரிக்கை மனுக்களைப் போட்டனர். இதன் பின் அவர்கள் கூறுகையில், வெம்பக்கோட்டை தாலுகாவில் கூலி வேலை செய்து சிரமப்பட்டுகிறோம். எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை. அத்துடன் இலவச வீட்டுமனை பட்டா வழங்காமல் உள்ளனர்.