திண்டுக்கல்: விழுப்புரத்தை தொடர்ந்து திண்டுக்கல் அதிமுக அலுவலகத்துக்கும் பூட்டு போட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நத்தம் விஸ்வநாதன் தரப்பில் திண்டுக்கல் எஸ்.பி.யிடம் மனு அளித்ததை தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் இருதரப்பு ஆதரவாளர்கள் இடையே மோதலை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
