சட்டமன்ற தேர்தல் பாதுகாப்புக்காக துணை ராணுவ படை வீரர்கள் 90 பேர் புதுகை வருகை

புதுக்கோட்டை, மார்ச் 2: சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக புதுக்கோட்டைக்கு துணை ராணுவ படை வீரர்கள் 90 பேர் வந்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிகளை செயல்படுத்த தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படை வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர். அந்த வகையில் லக்னோவில் இருந்து ஈரோடு வந்த துணை ராணுவ படையில் உதவி கமாண்டன்ட் வரதன் தலைமையில் துணை ராணுவ படை வீரர்கள் 90 பேர் புதுக்கோட்டை வந்தனர். இவர்கள் அனைவரும் ஆயுதப்படை மைதானம் அருகே தங்கி உள்ளனர். தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினருடன் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணி மற்றும் சோதனை பணிகளை மேற்கொள்கின்றனர். இதேபோல் மேலும் மூன்று கம்பெனிகளில் துணை ராணுவ படையினர், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளனர்.

Related Stories: