அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், மார்ச் 1: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் பென்சனர் நல சங்கம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் மாநில தலைவர் மருதமுத்து தலைமை வகித்தார். பேரவை துணைத்தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட தலைவர் கந்தசாமி, மாவட்டசெயலாளர் பச்சையப்பன், பேரவை ராஜேந்திரன், பொருளாளர் சூரியகுமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர், ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியத் திட்டத்தினை அரசே ஏற்று நடத்தவேண்டும், மாதத்தின் முதல் தேதியில் பென்சன் வழங்கிட வேண்டும், . பல ஆண்டுகள் பணிபுரிந்து மருத்துவ காரணங்களால் மருத்துவ விடுவிப்பு பெற்றவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: